மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்
- மூளை
கறிவேப்பிலைத்
துவையலை
48 நாள்கள்
சாப்பிட்டு
வந்தால்
மூளையின்
செயல்பாடு
சீராகி,
நாம்
சுறுசுறுப்புடன்
இருப்போம்.
குறைந்தது
ஆண்டுக்கு
இருமுறையாவது
கைகளில்
மருதாணி
வைத்தால்,
மனம்
தொடர்பான
கோளாறுகள்
நீங்கும்.
அதன்
குளிர்ச்சி
மூளைக்கு
ஓய்வைத்
தரும்.
வல்லாரை
இலைகளை
நெய்யில்
வதக்கி
சுடுசாதத்துடன்
இரண்டு
கவளம்
சாப்பிட்டு
வர
வேண்டும்.
ஞாபக
சக்தி
அதிகரிக்கும்.
தினசரி
இரண்டு
துண்டு
தேங்காயை
மென்று
உண்பதால் மூளையில்
எந்தப்
புண்களும்
வராது.
- கண்கள்
பாலுடன்
குங்குமப்பூ
சேர்த்துக்
குடித்து
வருவது
நல்லது.
தினமும்
50 கிராம்
அளவுக்கு
மாம்பழம்
அல்லது
பப்பாளியைச்
சாப்பிட்டு
வர
பார்வைத்திறன்
மேம்படும்.
அரைக்கீரையை
வாரம்
இருமுறை
சாப்பிட்டு
வந்தால்
கண்கள்
குளிர்ச்சியடையும்.
அதுபோல்
பொன்னாங்கண்ணி,
முருங்கைக்
கீரை
சாப்பிட்டாலும்
பார்வைத்திறன்
மேம்படும்.
வெண்டைக்காய்
மோர்க்குழம்பு,
வெண்டைகாய்
மசாலா,
வெண்டைக்காய்
பொரியல்
என
சாப்பிட
கண்களுக்கு
நல்லது.
தினந்தோறும்
நெல்லிக்காய்
ஜூஸ்
குடித்து
வந்தால்,
கண்
தொடர்பான
பிரச்னைகள்
வராது.
தினமும்
5 பாதாம்களை
சாப்பிட்டு
வரவேண்டும்
கண்
பலப்படும்.
- பற்கள்
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம்
சாப்பிட்டால்
பல்
தொந்தரவுகள்
வராது.
உணவிலும்
அடிக்கடி
கோவைக்காயைச்
சேர்த்துக்கொள்ளலாம்.
செவ்
வாழைப்பழத்தை
தினமும்
இரவில்
சாப்பிட்டு
வர
பல்லில்
ரத்தக்கசிவு,
பல்
சொத்தை
ஆகியவை
வராது.
பல்
உறுதியாக,
உணவை
நன்றாக
மென்று
சுவைக்க
வேண்டும்.
கேரட்,
கரும்பு,
ஆப்பிள்
போன்றவற்றைப்
பத்து
முறையாவது
நன்றாக மென்று
சாப்பிட
வேண்டும்.
- நரம்புகள்
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு
அத்திப்பழத்தை
தினந்தோறும்
சாப்பிட்டு
வர
நரம்புகள்
பலம்
பெறும்
மாதுளைப்
பழச்சாற்றில்
தேன்
கலந்து
48 நாள்கள்
குடித்து
வர
நரம்புகள்
வலுப்பெறும்.
இலந்தைப்
பழத்தை
அவ்வப்போது
சுவைத்து
வர
நரம்புகள்
பலம்
பெறும்.
கரிசலாங்கண்ணிக்
கீரையை
அடிக்கடி
சாப்பிட்டு
வருவது
நரம்புகளுக்கு
நல்லது.
- ரத்தம்
வாரம்
இரண்டு
நாள்கள்
பீட்ரூட்
ஜூஸ்
குடிப்பதால்
ரத்தம்
உற்பத்தியாகும்.
திராட்சைப்
பழ
ஜூஸ்
ஒரு
டம்ளர்
அல்லது
ஒரு
ஸ்பூன்
இஞ்சிச்
சாற்றில்
சிறிது
தேன்
கலந்து
குடித்து
வந்தால்
ரத்தம்
சுத்திகரிக்கப்படும்.
தினம்
ஒரு
கப்
அளவுக்கு
தயிர்
சாப்பிட்டு
வந்தால்,
ரத்தக்
குழாய்
அடைப்புகள்
நீங்கும்.
அடிக்கடி
விளாம்பழம்
சாப்பிட்டு
வந்தால்,
ரத்தத்தில்
உள்ள
கிருமிகள்
அழியும்.
இரண்டு
லிட்டர்
நீரைக்
கொதிக்க
வைத்து,
அதில்
சீரகத்தைப்
போட்டு
10 மணி
நேரம்
கழித்து,
அந்தத்
தண்ணீரை
நாள்
முழுவதும்
குடித்து
வந்தால்
ரத்தம்
சுத்தமாகும்.
- சருமம்
தேகம்
பளபளப்பாக
மாற
ஆவாரம்
பூ
டீ
குடித்து
வரலாம்.
ஆரஞ்சுப்
பழத்தையும்
சாப்பிட்டு
வரலாம்.
முட்டைக்கோஸ்
சாற்றை
முகத்தில்
தடவி
வர
முகத்தில்
ஏற்படும்
சுருக்கங்கள்
மறையும்
சந்தனக்
கட்டையை
இழைத்து
அதனுடன்
எலுமிச்சைச்
சாறு
கலந்து
முகத்தில்
பூசினால்
பருக்கள்
நீங்கும்.
முகம்
பிரகாசமாகும்.
ஆரோக்கியமான
உடல்,
பொலிவான
முகம்,
பளபளப்பான
சருமம்
பெற
அறுகம்புல்லை
நீர்
விட்டு
அரைத்து,
வெல்லம்
சேர்த்து
வாரம்
மூன்று
முறைக்
குடித்து
வர
வேண்டும்.
- நுரையீரல்
& இதயம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக்
கீரையை
வாரம்
இருமுறை
சாப்பிட்டு
வந்தால்
நல்லது.
ஆர்கானிக்
ரோஜாப்பூ,
பனங்கற்கண்டு,
தேன்
ஆகியவற்றை
லேகியம்
போல
கலந்து,
தினமும்
ஒரு
ஸ்பூன்
சாப்பிட்டு
வர
இதயம்
பலமாகும்
இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
சுண்டை
வற்றலை
உணவில்
அடிக்கடி
சேர்த்துக்கொண்டால்
நுரையீரல்
ஆரோக்கியத்துடன்
இருக்கும்.
கருப்பு
திராட்சை
ஜூஸ்,
கருப்பு
உலர்
திராட்சையை
சாப்பிட
இதயம்
பலம்
பெறும்.
முள்ளங்கிச்
சாற்றை
அரை
கப்
அளவுக்கு
மூன்று
வாரங்களுக்கு
குடித்து
வருவது
நல்லது.
இதனால்,
நுரையீரல்
தொடர்பான
பிரச்னைகள்
நெருங்காது.
ஆளிவிதைகள்,
பாதாம்,
வால்நட்
ஆகியவற்றில்
ஒமேகா
3, நல்ல
கொழுப்பு
இருப்பதால்
இதயத்துக்கு
நல்லது
- வயிறு
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை
தேநீராக்கிக்
குடித்து
வந்தால்,
வயிறு
தொடர்பான
பிரச்னைகள்
நீங்கும்.
வறுத்துப்
பொடித்த
சீரகத்தை
ஒரு
டம்ளர்
மோரில்
போட்டுக்
குடிக்க
வேண்டும்.
வாரத்தில்
இரண்டு
நாள்கள்
ஒரு
டம்ளர்
தேங்காய்ப்பாலுடன்
கருப்பட்டி
சேர்த்துக்
குடித்து
வருவதால்,
வயிறு
தொடர்பான
பிரச்னைகள்
எதுவும்
வராது.
சுரைக்காயை
வாரம்
இருமுறை
உணவில்
சேர்த்துக்கொள்ள
தொப்பை
கரையும்.
வாழைப்பூ,
மணத்தக்காளிக்
கீரையை
வாரம்
ஒருமுறையாவது
சாப்பிட
வயிற்றுத்
தொந்தரவுகள்
நீங்கும்.
வாரம்
ஒருமுறை
கொள்ளு
ரசம்
சாப்பிடக்
கெட்டக்
கொழுப்பு
கரையும்.
தொப்பையும்
குறையும்.
- கல்லீரல்
& மண்ணீரல்
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில்
இரண்டு
நாள்கள்
வேப்பம்பூ
ரசம்
வைத்துச்
சாப்பிடுங்கள்.
திராட்சை
பழச்சாற்றை
அருந்தி
வந்தால்
கல்லீரல்,
மண்ணீரல்
உறுப்புகளுக்கு
நன்மையைச்
செய்யும்.
- மலக்குடல்
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப்
பழத்தை
வாரம்
மூன்றுமுறை
சாப்பிடுவது
நல்லது.
அடிக்கடி
முளைக்கீரையை
சமையல்
செய்து
சாப்பிட்டு
வரலாம்.
மாலை
ஆறு
மணி
அளவில்,
மாம்பழ
சீசனில்
மாம்பழத்தைத்
தொடர்ந்து
சுவைத்து
வரலாம்.
மாதுளைப்பூ
சாறு
15 மி.லி, சிறிதளவு
பனங்கற்கண்டு
சேர்த்து
மூன்று
வேளையும்
குடித்து
வரவேண்டும்.
- பாதம்
விளக்கெண்ணெய்,
தேங்காய்
எண்ணெய்
சம
அளவு
எடுத்து
பாதத்தில்
தடவி
வந்தால்
பாதம்
மிருதுவாக
இருக்கும்
லேசாக
சூடு
செய்த
வேப்பெண்ணெயை விரல்களின்
இடுக்கில்
தடவினால்
சேற்றுப்
புண்கள்
சரியாகும்.
வாழைப்பூவை
பருப்பு
சேர்த்துச்
சமைத்து
சாப்பிட்டு
வந்தால்,
கை,
கால்களில்
வரும்
எரிச்சல்
நீங்கும்.
இரண்டு
கால்
விரல்களையும்
தினமும்
ஐந்து
நிமிடத்துக்கு
நீட்டி
- மடக்கும்
பயிற்சியைச்
செய்து
வரவேண்டும்.
ரத்த
ஓட்டம்
சீராகும்